நாடு முழுவதுமான மின்சார வெட்டு. மக்களின் அசௌகரியத்தை கருத்தில் கொள்ளும் பொறியியலாளர்கள்

இலங்கை முழுவதும் பொதுமக்கள் அடுத்த சில நாள்களுக்கு ஒன்றரை மணிநேர மின்வெட்டுககு முகம்கொடுக்க நேரிடும் என்று இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் அதன் முழு மின் விநியோகத் திறனைப் பெறுவதற்கு 3 நாள்கள் வரை ஆகும் என்று இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் செயலாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்தார்.
“நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் சிக்கலைச் சரி செய்வதில் கடினமான நேரத்தை எதிர்கொண்டுள்ளோம். இப்போது நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் தடைப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் உடனடியாக மின் உற்பத்தி நிலையங்களுக்கு ஏற்பட்டுள்ள அழுத்தத்தின் காரணமாக சுமைகளை அகற்றுவதற்கு நாங்கள் தீர்மானித்துள்ளோம்.

எனவே, அடுத்த 3 - 4 நாள்களுக்கு, இலங்கையில் உள்ள பகுதிகளில் சுமையை சமப்படுத்த ஒன்றரை மணிநேரம் மின்வெட்டை நடைமுறைப்படுத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம் ”என்றும் அவர் கூறினார்.

மின்சாரத் தடையினால் பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியத்தை கருத்தில் கொண்டு, வேலைநிறுத்தப் போராட்டத்தை, இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் தற்காலிகமாக மீளப் பெற்றுள்ளதாக விமலரத்ன மேலும் தெரிவித்தார்.

நாடு முழுவதுமான மின்சார வெட்டு. மக்களின் அசௌகரியத்தை கருத்தில் கொள்ளும் பொறியியலாளர்கள்

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House