சேவை நலன் பாராட்டு

கல்முனை மாநகரின் முதலாவது பாடசாலையும், 138 வருடங்கள் பழமை வாய்ந்ததுமான கல்முனை (தேசியப்பாடசாலை) அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்ற வீ.பிரபாகரன், மேற்படி பாடசாலை சமூகத்தினால் நாளை சனிக்கிழமை (12.12.2021) பாராட்டி கௌரவிக்கப்படவுள்ளார்.

இதனையொட்டிய சேவை நலன் பாராட்டு விழாவும், அன்னார் பற்றிய விசேட நினைவு மலர் வெளியீடும், பாடசாலை அதிபர் எஸ்.கலையரசன் தலைமையில், பாடசாலை நல்ல தம்பி மண்டபத்தில் நாளை காலை நடைபெறவிருக்கின்றது.

இந்த நிகழ்வில் கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் பிரதம அதிதியாகக் கலந்து கொள்வதுடன், ஓய்வு பெற்ற அதிபர் பிரபாகரனுக்கு பெருவரவேற்பும், கௌரவிப்பும் அளிக்கப்படவிருக்கின்றது.

பழம் பெருமை பெற்ற இப்பாடசாலையின் வளர்ச்சியிலும், கல்வி முன்னேற்றத்திலும் அளப்பரிய பங்காற்றிய ஓய்வு பெற்ற அதிபர் பிரபாகரன் உதவி அதிபராக 7 வருடங்களும் பிரதி அதிபராக 10 வருடங்களும் பொறுப்பு அதிபராக 11 வருடங்களும் பெரும் பணியாற்றியுள்ளார். அதிபர் சேவை தரம் 1 கல்வி நிருவாக சேவை தரம் மூன்றையும் சேர்ந்த அதிபர் பிரபாகரன், கிழக்கு பல்கலைக்கழகத்தின் முதலாவது தொகுதி விஞ்ஞான பாட்டதாரிகளுள் ஒருவருமாவார்.

கல்முனை அதிபர்கள் சங்கத்தலைவராக பல வருடங்கள் இருந்து வந்த அதிபர் பிரபாகரன், இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் பொது நிலையினர் மத்தியிலிருந்து தெரிவாகும் உப தலைவராக ஒருவருட காலம் இருந்த பெருமைக்குரியவருமாவார்.

சேவை நலன் பாராட்டு

ஏ.எல்.எம்.சலீம்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House