
posted 5th December 2021
நாட்டில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களில் 69 சதவீதமானவர்கள் எந்தவொரு கொரோனா தடுப்பூசியையும் பெறாதவர்கள் என சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் விசேட மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
மேலும், ஏனைய 31 சதவீதமானவர்கள் ஒன்று மற்றும் இரண்டு கொரோனா தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொரோனா மரணங்களில் 77 சதவீதமானவர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என தெரிவித்த அவர், 30 வயதுக்கு குறைவானவர்களின் மரண சதவீதம் 1.2ஆக பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அத்தோடு, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களில் 81 வீதமானவர்கள் வேறு பல நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

எஸ் தில்லைநாதன்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House