கோவிட் தொற்றும் மரணமும் அப்டேற் ( 06.12.2021)

நாட்டில் நேற்று கொரோனா தொற்றால் மேலும் 21 பேர் உயிரிழந்தனர் என்று அரசாங்க தகவல் திணைக்களம் இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

இதன்படி, 30 - 59 வயது பிரிவில் 4 ஆண்களும், ஒரு பெண்ணுமாக 5 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 7ஆண்களும், 9 பெண்களுமாக 16 பேரும் உயிரிழந்தனர்.

இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக் காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 14,505ஆக உயர்வடைந்தது.

வடக்கு மாகாணத்தில் இன்று செவ்வாய்க்கிழமை 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

யாழ். போதனா மருத்துவமனையின் ஆய்வுகூட அறிக்கையிலேயே இந்த விடயம் வெளியானது.

இன்றைய தினம் ஆய்வுகூடத்தில் 155 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதிலேயே 10 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதன்படி, யாழ். போதனா மருத்துவமனையில் 3 பேருக்கும், பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் ஒருவருக்கும், கோப்பாய் பிரதேச மருத்துவமனையில் ஒருவருக்கும் என யாழ். மாவட்டத்தில் ஐவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையில் 3 பேருக்கும், முல்லைத்தீவு விமானப்படை முகாமில் ஒருவருக்கும், வவுனியா மாவட்ட பொது மருத்துவமனையில் ஒருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

கோவிட் தொற்றும் மரணமும் அப்டேற் ( 06.12.2021)

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House