
posted 20th December 2021
இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளின்போது கைப்பற்றப்படும் மிகப்பெரிய இழுவைப் படகுகளை கட்டிவைப்பதால் மயிலிட்டித்துறைமுகத்துக்கு பாதிப்புக்கள் ஏற்படுவதாக மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
ஏற்கனவே 80 அடி நீளமான இரண்டு படகுகள் மயிலிட்டித் துறைமுகத்தில் கட்டப்பட்டுள்ளன. குறித்த படகுகளை பொறுப்பேற்கமுடியாது என்று கடற்படையினர் தெரிவித்திருந்த நிலையில் கடற்படையினருக்கும் நீரியல் வளத் திணைக்களத்தினருக்கும் இடையே இழுபறி நிலை ஏற்பட்டிருந்தது.
இருந்தபோதிலும் கடற்படையினர் அந்தப் படகுகளைப் பொறுப்பேற்காத நிலையில் அவை மயிலிட்டித்துறைமுகத்தில் கட்டப்பட்டுள்ளன.
அண்மைய நாட்களாக கடலில் நிலவும் கொந்தளிப்பு நிலை காரணமாக 80 அடி நீளமான படகுகள் கடலிலே இழுத்துச்செல்லப்படும் நிலையில் அதனைத் தாங்கி நிற்கும் துறைமுகத்தின் கற் தூண்கள் தொடர்பில் மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதனிடையே, நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மீனவர்கள் 43 பேருடன் கைப்பற்றப்பட்ட 06 படகுகளும் மயிலிட்டித்துறைமுகத்துக்கு இழுத்துவரப்பட்டன.
இதனால் தொடர்ந்தும் துறைமுகத்துக்கு பாதிப்பு நிலையே காணப்படுவதாக மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பில் கடற்றொழில் அமைச்சரிடம் மீனவர்கள் தெரிவித்ததை அடுத்து செவ்வாய்க்கிழமை (21.12.2021) துறைமுகப்பகுதிக்கு வந்து பார்வையிடுவதாகவும் அதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் தீர்மானிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார் என மீனவப் பிரதிநிதிகள் கூறினர்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House