
posted 4th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
நல்லதொரு வாய்ப்பை ரணிலே குழப்பினார்! - காமினி லொக்குகே குற்றச்சாட்டு
எமது கட்சியுடன் இணைந்து பயணிப்பதற்கு இருந்த வாய்ப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே இல்லாது செய்துகொண்டார் என்று பொதுஜன பெரமுன கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு;
பொதுஜன பெரமுன கட்சியினரும், ஜனாதிபதியும் இணைந்தே புதிய ஆட்சியை உருவாக்கினர். ரணில் விக்கிரமசிங்கவை பிரதராக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்பிறகு அவர் ஜனாதிபதி பதவிக்கு வருவதற்கும் எமது கட்சியால் நேசக்கரம் நீட்டப்பட்டது.
அடுத்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலும் கலந்துரையாடல் இடம்பெற்றது. ஆனால், இறுதி முடிவுக்கு வருவதற்குள் எமது கட்சியில் இருந்து ஒரு பிரிவினரை எடுத்துவிட்டார். இதனையடுத்தே பேச்சுகள் நிறுத்தப்பட்டன. நாமும் ஒரு வேட்பாளரை நிறுத்தும் முடிவை எடுத்தோம்.
பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளரை தேசிய சம்மேளனத்திலேயே மாற்ற முடியும். வீதியில் நடக்கும் கூட்டங்களால் அதனை மாற்ற முடியாது. செயலாளர் பதவியில் மாற்றம் வராது என்றார்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)