
posted 17th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
திருகோணமலையில் 26 வயது இளைஞன் சுட்டுப்படுகொலை
திருகோணமலையில் வயல் காவலில் ஈடுபட்ட 26 வயது இளைஞன், ரி - 56 ரக துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருகோணமலை, சிறீ புர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கம்மம்பில கிராமத்தில் பிள்ளையார் கோவில் சந்தியில் நேற்று (16) வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற இந்தச் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தில் காவந்திஸ்ஸ, சிறீ புர பகுதியைச் சேர்ந்த 26 வயது இளைஞனே உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் வயல் காவலில் ஈடுபட்டிருந்த நிலையில், மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர், அவர் மீது மூன்று முறை ரி- 56 ரக துப்பாக்கியால் சுட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக சிறீ புர பொலிஸார் கூறினர்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிறீ புர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் டுபாயில் இருக்கும் போதைப் பொருள் கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)