
posted 11th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
த. தே. பொதுக்கட்டமைப்பை சந்திப்புக்கு அழைத்த ரணில்
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை களமிறக்கும் தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பினரை சந்திப்புக்கு அழைத்துள்ளார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.
எதிர்வரும் 15ஆம் திகதி மாலை 5 மணிக்கு ஜனாதிபதி செயலத்தில் இந்த சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.
தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ் மக்கள் கூட்டணி, ரெலோ, புளொட், ஈ. பி. ஆர். எல். எவ், தமிழ் தேசிய கட்சி, ஜனநாயக போராளிகள் கட்சி, தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் மற்றும் சிவில் அமைப்புகளை சேர்ந்த 7 பேருக்கும் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)