
posted 17th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
சில சுகாதார பணியாளர்களின் கவனயீனத்தால் கொல்லப்பட்ட மன்னார் சிந்துஜா
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த பட்டதாரி பெண் மரியராஜ் சிந்துஜாவின் மரணம் தொடர்பில் அந்த வைத்தியசாலையின் மருத்துவ ஆலோசகர்கள் குழுவினால், சுகாதார அமைச்சுக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மரியராஜ் சிந்துஜாவின் மரணம் தொடர்பில் தாம் ஆழ்ந்த கவலை அடைவதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வைத்தியசாலையின் சில பணியாளர்களின் கவனயீனத்தால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இச் சம்பவத்தில் குற்றமிழைத்தவர்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய துறைசார் ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பான சுகாதார அமைச்சின் முடிவை தாம் எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)