
posted 8th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
சூரன்.ஏ. ரவிவர்மாவின் "திரைக்கு வராத சங்கதி" நூல் வெளியீட்டுவிழா
எழுத்தாளரும்,ஊடகவியலாளருமான சூரன்.ஏ. ரவிவர்மாவின் " திரைக்கு வராத சங்கதி" எனும் நூல் வெளியீட்டுவிழா 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்3.30 மணிக்கு கரவெட்டி வதிரி தேவரையாளி இந்துக் கல்லூரியில் சிரேஷ்ட ஊடகவியலாளர் .இ. பாரதியின் தலைமையில் நடைபெறும்.
திருமதி ரவிச்சந்திரன் ரவிசக்தி [இதழ் TNTR சர்வதேச ஊடகம் பிரான்ஸ், ஆசிரியை, மேற்கு இலண்டன் தமிழ்ப் பாடசாலை] வரவேற்புரை நிகழ்த்துவார். "ஒருவன்" செய்தித்தள முகாமையாளர் அ. நிக்ஸன் அறிமுகவுரையையும், ஜீவநதி, கடல் ஆகிய சஞ்சிகையின் ஆசிரியர் க. பரணீதரன் வெளியீட்டுரையையும், யாழ்ப்பாண பல்கலைக் கழக ஊடகக் கற்கைகள் துறை தலைவர் திருமதி பூங்குழலி சிறிசங்கீர்த்தனன் கருத்துரையையும் நிகழ்த்துவர்கள்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)