
posted 2nd August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
இந்திய மீனவர் உயிரிழப்பினை எதிர்த்து இராமேஸ்வரத்தில் முற்றுகை
இந்திய மீனவர்கள் நேற்று (01) வியாழக்கிழமை இராமேஸ்வரத்தில் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களின் போராட்டத்தால் இராமேஸ்வரம் முற்றாக இயல்பு நிலையை இழந்தது.
இலங்கை கடற்படையின் படகு மோதியதில் இந்திய மீனவர் ஒருவர் உயிரிழந்த, மற்றொருவர் காணாமல் போன சம்பவத்தையடுத்தே நேற்று (01) மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இராமேஸ்வரம் அரச பணிமனையை முற்றுகையிட்டும், மதுரை தேசிய நெடுஞ்சாலையை மறித்தும் மீனவர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மீனவர்களின் போராட்டத்தால் இயல்புநிலை பாதிக்கப்பட்டது. அத்துடன், பேருந்துகள் எவையும் ஓடவில்லை.
இந்திய மீனவரின் உயிரிழப்புக்கு தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் உட்பட தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதேவேளை, உயிரிழந்த மீனவரின் குடும்பத்துக்கு 10 இலட்சம் இந்திய ரூபாயை நிவாரணமாக வழங்க தமிழ்நாடு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)