
posted 28th August 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
மர்ஹும் அஸ்வரின் 6ஆவது நினைவு தினம்
முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வருடைய ஆறாவது நினைவு தினம் எதிர்வரும் 29 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெறுகிறது.
முஸ்லிம் சமய கலாசார அமைச்சராகப் பணியாற்றிய அவர், தொடர்ந்து தேசியப் பட்டியல் மூலம் 5 முறை பாராளுமன்றத்துக்குத் தெரிவானார். இதேநேரம், முன்னாள் இராஜாங்க அமைச்சர் மர்ஹும் ஏ.எச்.எம். அஸ்வரின் ஆறாவது நினைவு தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்துள்ள நினைவு தின நிகழ்வு அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் அக்கரைப்பற்று மாவட்ட காரியாலயத்தில் எதிர்வரும் 29 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் இடம் பெறவுள்ளது.
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் அம்பாறை மாவட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில், ஏ. மாஹிர் தலைமையில் இடம் பெறவுள்ள இந்நிகழ்வில், முன்னாள் தேசியத் தலைவர் எம்.ஐ. உதுமாலெவ்வை மற்றும் முன்னாள் அதிபர் ஏ.ஏ கபூர் ஆகியோர் பிரதான உரையாற்றுவதோடு, முன்னாள் அதிபர் ஐ.எல்.ஏ. மஜீத் வரவேற்புரையையும் மாவட்ட செயலாளர் எம்.எச்.அப்துல் வஹாப் நன்றியுரையையும் நிகழ்த்துவர்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)