
posted 2nd August 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
தமிழ்ச்சங்கத்தின் பெயர்ப்பலகை

மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத்திற்குச் சொந்தமான களுவாஞ்சிக்குடிக் காணியில் தமிழ்ச் சங்க பெயர்ப் பலகை தமிழ்ச் சங்கத் தலைவர் சைவப்புரவலர் வி. ரஞ்சிதமூர்த்தி தலைமையில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத்தின் வரலாறும், தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமான காணி பற்றிய வரலாற்றுத் தகவல்களும் மிகவும் தெளிவான வகையில் சபையோருக்கு தலைவரினால் எடுத்துரைக்கப்பட்டது.
அதேவேளை, அமரர் ஆறுமுகம் தொண்டமானின் ஜனன சிரார்த்த தின ஞாபகார்த்தக் கட்டுரை மற்றும் கவிதைப் போட்டியில் பங்குபற்றி பரிசுபெற்ற மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் கலாபூசணம் கா. சிவலிங்கத்தை மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத்தால் கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
மட்டக்களப்புத் தமிழ்ச் சங்க பொதுச் செயலாளர் சட்டத்தரணி மு. கணேசராசா உரையாற்றியதைத் தொடர்ந்து சங்கத்தின் எதிர்காலச் செயற்பாடுகள் சார்ந்த கருத்துக்கள் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமான களுவாஞ்சிக்குடி காணியை பராமரித்தல், வினைத்திறன் கொண்ட செயற்பாட்டிற்கு அதனை எவ்வாறு பயன்படுத்தல் என்பன தொடர்பான கருத்துக்கள் செயற்குழு உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டன.
அவ்வகையில் குறித்த காணியில் தமிழ்ச் சங்கச் செயற்பாட்டின் இயங்குநிலைக்காக சபையோரால் குழு ஒன்று தெரிவுசெய்யப்பட்டு பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டன.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)