
posted 3rd September 2023
அரச இலக்கிய விழாவுக்கான ஆரம்ப போட்டி அம்பாறையில்
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
அரச இலக்கிய விழாவுக்கான ஆரம்ப போட்டி அம்பாறையில்
கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வருடாந்தம் நடத்தப்படுகின்ற 20 அரச விழாக்களுள் அரச இலக்கிய விழாவிற்கான ஆரம்ப கட்டப் போட்டிகள் அம்பாறை மாவட்டத்தின் தமிழ் மொழி மூலமான பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் பிரதேச கவிதை பாடல் போட்டி, கையெழுத்து பிரதியாக்கப் போட்டி, சிறுகதைப் போட்டி ஆகிய போட்டிகளில் போட்டியாளர்களைத் தெரிவு செய்வதற்காக மாவட்ட செயலாளர் மற்றும் உதவி மாவட்ட செயலாளர் ஆகியோரது வழிகாட்டலில் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரீ.எம். றின்ஸானின் மேற்பார்வையில் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தற்சமயம் மேற்படி பிரயோகக் கலைகளுக்கான தெரிவுகள் இடம் பெற்று வருகின்றன.
அட்டாளைச்சேனை, காரைதீவு, நிந்தவூர், சாய்ந்தமருது, கல்முனை, கல்முனை வடக்கு, நாவிதன் வெளி, சம்மாந்துறை, இறக்காமம், அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, திருக்கோயில், பொத்துவில் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் மேற்படி போட்டிகள் தற்போது நிறைவடைந்த நிலையில், மாவட்ட மட்ட தெரிவுக்கான போட்டிகள் எதிர்வரும் செப்ரெம்பர் 7ஆம் திகதி நடைபெற ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)