யாழ். பல்கலைக்கழக மாணவர் சுழிபுரத்தில் போராட்டம்

உறவுகளின் துயர் பகிர்வு

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

யாழ். பல்கலைக்கழக மாணவர் சுழிபுரத்தில் போராட்டம்

சுழிபுரம் பராளாய் முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரத்தை சங்கமித்தை நாட்டிய மரம் என வெளியிடப்பட்ட அரச வர்த்தமானி மீளப்பெறப்படவேண்டும் என தெரிவித்து யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று சனி (05) சுழிபுரத்தில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தை தொடர்ந்து சுழிபுரம் சந்தியில் இருந்து பராளை முருகன் ஆலயத்தை நோக்கி பேரணி இடம்பெற்றது.
போராட்டத்தின் போது தொல்லியல் திணைக்களத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டதுடன் மாணவர்கள் பதாகைகளையும் தாங்கியிருந்தனர்.

இந்தப் போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள், மத குருமார்கள், சைவ அமைப்புக்கள், சிவில் அமைப்புகள், மக்கள் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

சங்கமித்தை வரவுமில்லை அரச மரம் நடவுமில்லை - வெடித்தது சங்கானையில் போராட்டம்!

சங்கமித்தை வரவுமில்லை அரச மரம் நடவுமில்லை - வெடித்தது சங்கானையில் போராட்டம்!

எஸ் தில்லைநாதன்

சுழிபுரம் - பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரம் சங்கமித்தையால் கொண்டு வந்து நாட்டப்பட்டது என சித்தரித்து வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டுள்ளது.

இதனால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சங்கானை பேருந்து நிலையத்திற்கு முன்னால் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் போராட்டம் ஒன்று நேற்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது போராட்டக்காரர்கள் பாததைகளை ஏந்தியவாறு "சங்கமித்தை வரவுமில்லை அரச மரம் நடவுமில்லை, பொய்யான வர்த்தமானியை இரத்துச் செய், இந்த மண் எங்களின் சொந்த மண், வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம், பறாளாய் முருகன் தமிழர் சொத்து, தாயகத்தில் ஆக்கிரமிப்பு சர்வகட்சி கூட்டத்தில் நல்லகணக்க நாடகம், இராணுவமே வெளியேறு" என கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அக் கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், கட்சியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், கட்சியின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

யாழ். பல்கலைக்கழக மாணவர் சுழிபுரத்தில் போராட்டம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)