
posted 5th August 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
வைத்திய நிபுணர்களுக்கு முல்லையில் பற்றாக்குறை - சுகாதார சேவைகள் பணிப்பாளர்
முல்லைத்தீவு வைத்தியசாலைகளில் வைத்திய நிபுணர்களின் பற்றாக்குறை நிலவுவதாக வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியகலாநிதி த. சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
நேற்று முன்தினம் வியாழன் (03) இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
முல்லைத்தீவு வைத்தியசாலைகளில் நிரந்தர வைத்திய நிபுணர்கள் இல்லாமை ஒரு குறையாக உள்ளது. குறிப்பாக பொருளாதார நெருக்கடிக்குள் இலங்கையில் உள்ள வைத்திய நிபுணர்கள் பலர் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டனர்.
இறுதியாக நடைபெற்ற கலந்துரையாடலில் இரண்டு வைத்தியசாலைகளுக்கும் இரண்டு வைத்தியர்களையாவது நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டபோது பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் சுகாதார அமைச்சரும் இருந்தனர்.
அதனை நாங்கள் தற்போது தொடர்ந்து கேட்கின்றோம். எதிர்வரும் காலத்தில் நிரந்தர வைத்திய நிபுணர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்.
விசேட ஆளணி எங்களுக்கு தேவையாக உள்ளது. நிதி அமைச்சு புதிய ஆளணியை நியமிக்காத ஒரு சூழ்நிலை காணப்படுகின்றது. உள்ளக கட்டமைப்பிலும் விரைவான அபிவிருத்தி தேவையாகவுள்ளது. அதற்கு திட்டம் ஏதாவது இருந்தால் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)