
posted 20th August 2022
ரணில் விக்கிரமசிங்க இன்று கதைப்பதை நாளை மாறி செயற்படுவார் என யாழ் மாவட்தய பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் பொது செயலாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
இன்று மதியம் 12 மணியளவில் யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை தம்பசிட்டி, மற்றும் கந்தரோடையார் ஒழுங்கை வீரபத்திரர் சனசமூக நிலையம் ஆகிய இடங்களில் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் வீட்டுத் தோட்டத்தை ஊக்கிவிப்பதற்க்காக விதைகள் மற்றும் நாற்றுக்கள் வழங்கி வைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த மரக்கன்று வழங்கும் நிகழ்வு பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் இ. கமலன் தலைமையில் மதியம் 12 மணியளவில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் ப. சுரேஷ் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மகளிர் அணி செயலாளர் கிருபா கிரிதரன், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மத்தியகுழு உறுப்பினர்கள், தொகுதி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY