
posted 21st August 2022
நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகளின் 41வது பீடாரோகன விழா கடந்த வெள்ளிக்கிழமை (19) இடம்பெற்றது.
நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் நல்லூர் உற்சவ காலத்தை முன்னிட்டு முன்னெடுக்கும் தெய்வீக திருக் கூட்டத்தின் தொடர் நிகழ்வின் ஒரு பகுதியாக ஆதீனத்தின் கலா மண்டபத்தில் வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் அகில இலங்கை இந்து மாமன்றம் ஆகியவற்றின் அனுசரணையுடன் கொக்குவில் கிருஷ்ணா அறநெறிப் பாடசாலை நிகழ்வுக்கான ஏற்பாட்டை மேற்கொண்டது.
மங்கல இசை பஜனையுடன் ஆரம்பித்த இந்நிகழ்வில் ஆதீன குரு முதல்வரின் பீடாரோகன விழா சிறப்பு பூஜை பாத பூஜை இடம் பெற்று ஆசி பெற நிகழ்வு இடம் பெற்றது
இந்நிகழ்வில் ஆன்மீக சுடர் ரிஷி தொண்டுநாத சுவாமிகள், முனைவர் திருமதி மனோன்மணி சண்முகதாஸ், செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் உட்பட சமயப் பெரியார்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY