கொழும்பில் கோவிட்

இலங்கையில் கொழும்பிலும், அதனை அண்டிய பகுதிகளிலும், கொரோனா உப திரிபு ஒன்று வேகமாக பரவுவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின், ஒவ்வாமை நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் துறைப் பிரிவு தெரிவித்துள்ளது.

24 கொரோனா நோயாளர்களின் மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தியதில், 20 மாதிரிகளில், இந்தப் புதிய உப திரிபு கண்டறியப்பட்டுள்ளதாக அந்தப் பிரிவின் விசேட வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

டீயு-5 என்ற கொரோனா உப திரிபானது, கொழும்பில் வேகமாக பரவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், மேலும் சில கொரோனா நோயாளர்களின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. குறித்த வைரஸ் தொடர்பான புதிய
தகவல்களை அதன் பின்னர் கண்டறிய முடியும் என விசேட வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் கோவிட்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY