இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டிருந்த ஒற்றை சிவப்பு ரோஜா மலர்

இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடர் நேற்று புதன் கிழமை (03) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ஜனாதிபதி கொள்கை விளக்க உரையை ஆற்றியிருந்தார். இதன் பின்னர் அடுத்த பாராளுமன்ற அமர்வு இம்மாதம் 9ஆம் திகதி பிற்பகல் 1 மணிக்கு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நேற்றைய தினம் ஜனாதிபதி அருகில் இடம்பிடித்திருந்த ஒற்றை சிவப்பு ரோஜா மலர் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.

சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்து ஜனாதிபதி கொள்கை விளக்க உரையினை மேற்கொள்ளும் போது சபாநாயகர் மேசையில் வைக்கப்பட்டிருந்த ஒற்றை சிவப்பு ரோஜா புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

ஏனெனில் சபாநாயகர் மேசையில் வழமையாக தண்ணீர் மட்டுமே காணப்படும்.

இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டிருந்த ஒற்றை சிவப்பு ரோஜா மலர்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)