
posted 26th August 2022
அருள்மிகு பேசாலை ஸ்ரீ சிவசுப்பிரசுவாமி ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் வியாழக்கிழமை (25.08.2022) தீர்த்த உற்சவத்துடன் நிறைவுற்றது.
அன்றையத் தினம் (வியாழக்கிழமை) இவ்வுற்சவத்தை முன்னிட்டு அசுத்திர சிவசங்கர பூஜைகள் இடம்பெற்று விஷேடமாக பால் காவடி, பறவை காவடி என்பன இடம்பெற்றன.
இக் காவடிகளானது சிறுத்தோப்பு ஸ்ரீ ஆஞ்சலே ஆலயத்திலிருந்து புறப்பட்டு மன்னார் தலைமன்னார் பிரதான பேசாலை வீதியூடாக முருகன் கோவிலை வந்தடைந்தது.
பல நூற்றுக் கணக்கான பக்தர்தர்கள் புடைசூழ பாற்செம்பு காவடிகள் பக்தர்கள் எடுத்த நிலையில் இந்த அலங்கார உற்சவத்தின் பத்தாம் நாள் விழா நிறைவுற்றது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY