ஐ. நா. பிரதிநிதிகள் - யாழ். மாவட்ட செயலர் சந்திப்பு

நேற்று யாழ்ப்பாணம் வந்த ஐக்கிய நாடுகள் (ஐ. நா.) சபையின் பிரதிநிதிகள் யாழ். மாவட்ட செயலரை சந்தித்துக் கலந்துரையாடினர்.

ஐக்கிய நாடுகளின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்துக்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்கான பாங்கொக் அலுவலகத்தின் பணிப்பாளர் டேவிட் மஸ்னெக்யன் - கார், இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் ஆகியோரே யாழ். மாவட்ட செயலர் க. மகேசனை சந்தித்தனர்.

காலை 9 மணியளவில் யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிட்ட டேவிட் மஸ்னெக்யன் - கார், “தற்போதைய பொருளாதார நெருக்கடியால் வாழ்வாதாரம் மற்றும் கடற்றொழிலுக்கு ஏற்பட்டுள்ள சவால்கள் குறித்து யாழ். மாவட்ட செயலரிடம் கேட்டறிந்தோம்”, என்றார்.

கடந்த 16 ஆம் திகதி இலங்கை டேவிட் மஸ்னெக்யன் - கார் தொடர்ச்சியாக பல இடங்களுக்கும் சென்று பல தரப்பினரையும் சந்தித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ. நா. பிரதிநிதிகள் - யாழ். மாவட்ட செயலர் சந்திப்பு

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now


ENJOY YOUR HOLIDAY