
posted 6th August 2022
யாழ்ப்பாணம், தொல்புரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் யாழ்ப்பாணம் முனியப்பர் ஆலய முன்றலில் இருந்து கதிர்காமத்தை நோக்கி சைக்கிள் பயணத்தை ஆரம்பித்தனர்.
இந்த பயணம் இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம் கோட்டை முனியப்பர் கோவிலடியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது. தொல்புரத்தைச் சேர்ந்த குகநாதன் நிதுசன் (வயது 24) பாஸ்கரன் சுமித்தன் (22) ஆகிய இரண்டு இளைஞர்களுமே இவ்வாறு சைக்கிள் பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் உடல் ஆரோக்கியம் போன்ற விடயங்களை எடுத்துக்காட்டும் முகமாகவே இந்த சைக்கிள் பயணம் அமையவுள்ளதாக குறித்த இளைஞர்கள் தெரிவித்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY