
posted 19th August 2021

இன்றைய (19.08.2021) கொறொனா தொற்று
யாழ்.மாவட்டத்தில் 68 பேர் உட்பட வடக்கில் 128 பேருக்கு தொற்று!
யாழ்.மாவட்டத்தில் 68 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் இன்று வியாழக்கிிழமை 1 28 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 740 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவற்றின் விபரம் வருமாறு;
யாழ்.மாவட்டத்தில் பேர் 68 பேர்,
யாழ்.போதனா வைத்தியசாலையில் 23 பேர்,
சங்கானை பிரதேச வைத்தியசாலையில் 12 பேர்,
கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் 07 பேர்,
வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 07 பேர்,
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் 06 பேர்,
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் 04 பேர்,
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 04 பேர்,
ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் 02 பேர்,
நொதேர்ன் சென்றல் ஹொஸ்பிரலில் ஒருவர்,
இளவாலை பிரதேச வைத்தியசாலையில் ஒருவர்,
பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலையில் ஒருவர்,
கிளிநொச்சி மாவட்டத்தில் 32 பேர்
அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலையில் 18 பேர்,
பளை பிரதேச வைத்தியசாலையில் 05 பேர்,
மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் 09 பேர்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் 06 பேர்
ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நான்கு பேர்,
மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் 02 பேர்,
வவுனியா மாவட்டத்தில் 18 பேர்
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 14 பேர்,
பூவரசங்குளம் பிரதேச வைத்தியசாலையில் 02 பேர்,
வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் 02 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வெள்ளாங்குளம் விமானப்படை முகாமில் 03 பேர்,
வசாவிளான் தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எஸ் தில்லைநாதன்