140 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது
140 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது

இந்தியாவில் இருந்து இலங்கைக்கை கடத்திவரப்பட்ட 140 கிலோ கஞ்சாவுடன் இருவர் வடக்கு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டனர்.

இன்று வியாழக்கிழமை (26) அதிகாலையில் மணல்காடு, பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்படையினர் நடத்திய சிறப்பு நடவடிக்கையின் போது சுமார் 139 கிலோ மற்றும் 930 கிராம் கேரளா கஞ்சாவை கைப்பற்ற முடிந்தது.

இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்களை கைது செய்வதற்கும் இந்த நடவடிக்கை வழிவகுத்ததாக கடற்படையினர் தெரிவித்தனர்.

இலங்கை கடற்படையினர் கடல் வழி போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை முறியடிக்க வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, வடக்கு கடற்படை கட்டளை கடலோர ரோந்து கப்பல் பி 177 ஐ வடக்கு கடற்பரப்பில் நிறுத்தி இந்த சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மணற்காட்டு கடற்பரப்பில் இருந்து சந்தேகத்திற்கிடமான படகு ஒன்று தரையை நோக்கி வேகமாக பயணிப்பதை கடற்படையினர் அவதானித்தனர்.

சந்தேகத்திற்குரிய டிங்கி படகு தப்பிக்க முயன்ற போது பல சாக்குகளை கடலில் கொட்டிவிட்டு தப்பிக்க முயன்ற போது பி 177 தாக்குதல் படகால் தடுத்து நிறுத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து கேரளா கஞ்சா நிரப்பப்பட்ட ஒரு சாக்கை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட இரண்டு சந்தேக நபர்களை கைது செய்தனர்.

140 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது

எஸ் தில்லைநாதன்