
posted 25th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள்
மன்னார் முசலி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள தெரிவு செய்யப்பட்ட வறிய குடும்பங்களுக்கு மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வுச் சங்கம் உலர் உணவுப் பொதிகள் வழங்கிய நிகழ்வு இடம்பெற்றது.
முசலி செயலகப் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 26 வறிய குடும்பங்களுக்கு சுமார் 4000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகளே வழங்கப்பட்டன.
திங்கள் கிழமை (24) வழங்கப்பட்ட இவ் உலர் உணவுப் பொதிகள் எயிட் குழுக்களின் நிதி அனுசரணையுடன் மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வுச் சங்கத்தின் ஊடாக வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் முசலி பிரதேச செயலாளர் இச்செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வுச் சங்க செயலாளர், உப செயலாளர், ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)