
posted 11th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
ரயிலுடன் மோதுண்டு உயிரிழந்த யானைகள்
திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி நேற்று முன் தினம் பயணித்த இரவு தபால் ரயிலில் ஹபரணை பகுதியில் இரண்டு காட்டு யானைகள் மோதுண்டு உயிரிழந்துள்ளன என ஹபரணை பொலிஸார் தெரிவித்தனர்.
இதன் காரணமாக குறித்த ரயில் தடம் புரண்டுள்ளது. இருப்பினும் பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ரயில் பாதையை திருத்தும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னரும் திருகோணமலையில் கடந்த 7 ஆம் திகதி ரயில் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டிருந்த நிலையில், மீண்டும் சேவை ஆரம்பிக்கப்பட்ட போது குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)