
posted 3rd April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
மீட்கப்பட்ட ஆணின் சடலம்
பளை பொலிஸ் பிரிவில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுளார். கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரிய பளை பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இனங்காணப்பட்டுள்ளது.
பெரியபளையில் வசித்து வந்த கணபதிபிள்ளை முருகேசம்பிள்ளை என்பவர் சனிக் கிழமை (01) தினம் காணாமல் போயுள்ளார். இந்த நிலையில் நேற்று (02) அருகில் உள்ள தோட்டக்காணி ஒன்றில் சடலமாக இனங்காணப்பட்டுள்ளார்.
குறித்த மரணம் தொடர்பான விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)