
posted 1st May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
மன்னாரில் மேதினக் கொண்டாட்டம்
கோவிட் சர்வதேசப் பரவல் காரணமாகவும், இதனால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியினாலும் மேதினமன்று நடைபெற்று வந்த ஆலய வழிபாடுகளும், நிகழ்ச்சிகளும் இடம்பெறாதிருந்தன.
ஆனால், கோவிட் அருகிய நிலையிலும், பொருளாதார வீழ்ச்சியில் முன்னேற்மில்லாதிருப்பினும் மன்னார் மாவட்டத்தின் பல கிராமங்களில் தொழிலாளரின் பாதுகாவலராம் புனித சூசையப்பர் தினம் கொண்டாடப்பட்டது.
மன்னார் மறைமாவட்டத்தில் மீனவர்கள் செறிந்து வாழும் பல கிராமங்களில் காலையில் கடற்கரையோரங்களில் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன் அப்பகுதிகளிலுள்ள மீனவ அமைப்புக்கள் முன்னையப்போன்று பல விளையாட்டு கலை நிகழ்வுகளையும் நடாத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)