
posted 8th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
பிரசாரத்தை ஆரம்பித்த டிலித் ஜெயவீர
ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து பிரசாரத்தை ஆரம்பித்துள்ளார் தென்னிலங்கையின் ஊடகப் பிரபலமும் பெருவர்த்தகருமான டிலித் ஜெயவீர. இவர் எதிர்வரும் 26ஆம் திகதி யாழ்ப்பாணம் வரவுள்ளார்.
யாழ்ப்பாணம் வரும் டிலித் ஜெயவீர பல இடங்களிலும் பிரச்சாரப் பணியில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதுடன், பல தரப்பினரையும் சந்தித்துப் பேசவுள்ளார் என்று அறிய வருகின்றது.
டிலித் ஜெயவீர சிங்களம், ஆங்கிலம், தமிழ் மொழிகளில் பத்திரிகைகள், இணையத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சி அலைவரிசையையும் நடத்தி வருகின்றார். கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அதிசெல்வாக்குமிக்கவராக இருந்த இவர், கிழக்கு தொல்பொருள் செயலணியின் உறுப்பினராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)