கவனவீர்ப்பு போராட்டம்

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

கவனவீர்ப்பு போராட்டம்

காணாமல் போனோர் பணிமனையின் செயல்பாடுகளுக்கு எதிராக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சனி (29) முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கவனவீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போர் முடிவடைந்த பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமக்கான நீதி வேண்டி போராடி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 2017 மார்ச் 8ஆம் திகதி முதல் முல்லைத்தீவில் தொடர்ச்சியான போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், காணாமல் போனோர் பணிமனையினர் ஊடாக அரசாங்கம் தம்மை அச்சுறுத்தி விவரங்களைப்பதிகிறது என்றும் சர்வதேச நீதி விசாரணை கோரிக்கையை முடக்கும் விதமான செயல்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன எனவும் குற்றஞ்சாட்டியே நேற்று இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, காணாமல் போனோர் பணிமனையின் செயல்பாடுகள் வேண்டாம், சர்வதேச விசாரணையே வேண்டும் என்று கோரியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கவனவீர்ப்பு போராட்டம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News