
posted 17th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
உதிரம் கொடுத்து உயிர் காப்போம் - துறைநீலாவணையில் இரத்த தானம்
உதிரம் கொடுத்து உயிர் காப்போம் எனும் தொனிப்பொருளில் நான்கு வருடங்களுக்கு முன்னர் வீதி விபத்தில் அகால மரணமடைந்த துறைநீலாவணையைச் சேர்ந்த யோகராசா - கௌதமனின் (றொபின்) ஞாபகார்த்தமாக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு இரத்ததானம் செய்யும் நிகழ்வு துறைநீலாவணை வைத்தியசாலையில் இடம்பெற்றது.
அமரர் யோ. கௌதமனின் நண்பர்களின் ஒழுங்மைப்பில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கான பொறுப்பு வைத்தியர் டாக்டர் பீ.எம். கவிதா தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்த இரத்ததான முகாமில் பெருந்தொகையான ஆண்களும் பெண்களும் இரத்ததானம் செய்தமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)