
posted 12th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
இன நல்லிணக்க இப்தார்
கல்முனை வலயக் கல்வி அலுவலக நலன்புரிச் சங்கம் ஏற்பாடு செய்து நடாத்திய சமூக நல்லிணக்கத்திற்கான இப்தார் நிகழ்வு வலயக் கல்வி அலுவலக கேட்போர் கூடத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர் எம். எஸ். சஹதுல் நஜீம் தலைமையில் இடம்பெற்றது.
இன நல்லிணக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இப்தார் நிகழ்வில் இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய பிரமுகர்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்து சிறப்பித்தனர்.
இந்த இப்தார் நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம். எம். ஹரீஸ், த. கலையரசன் முன்னாள் மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஐ.எம். இஸ்டீன் சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர் எஸ்.எம்.எம். எஸ் உமர் மௌலானா, ஓய்வு நிலை வலயக் கல்விப் பணிப்பாளர்களான எம்.எஸ். அப்துல் ஜலீல், எம். ரீ. ஏ. தௌபீக், ஓய்வு நிலை பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான ஏ.எல்.எம். முக்தார், எஸ்.எல் ஏ. றஹீம், கல்முனை கல்வி வலய கணக்காளர் வை. ஹபிபுள்ளா மற்றும் கல்முனை கல்வி வலய பாடசாலைகளின் பொறுப்பு அதிபர்கள், தரம்பெற்ற அதிபர்கள், வலயக் கல்வி அலுவலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், திணைக்களத் தலைவர்கள் என பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)