
posted 15th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
மன்னாரில் 16 மில்லியன் ரூபா பெறுமதியான போதை மாத்திரைகள் கண்டுபிடிப்பு
மன்னார் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும் மன்னார் ஊழல் ஒழிப்புப் பிரிவினரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின்போது சுமார் 16 மில்லியன் ரூபா பெறுமதியான போதை மாத்திரைகளை கண்டுபிடித்துள்ளதாகப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் வியாழக்கிழமை (13) காலை சிலாவத்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக தொயவருவதாவது;
வியாழக்கிழமை (13) மன்னார் இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின்படி மன்னார் ஊழல் ஒழிப்புப் பிரிவுனர் இராணுவப் பிரிவினருடன் இணைந்து மன்னார் சிலாவத்துறை நாவாந்தலுவத்தை என்ற காட்டுப் பகுதியை சுற்றிவளைத்து மேற்கொண்ட தேடுதல் வேட்டையின்போது போதை மாத்திரைகளை கண்டுப்பிடித்து கைப்பற்றியுள்ளனர்.
இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படும் சுமார் 16 மில்லியன் ரூபா பெறுமதியான 1,11,000 போதை மாத்திரைகளே கண்டுப்பிடிக்கப்பட்டதாகப் பொலிசார் தெரிவித்தனர்.
கண்டுபிடிக்கப்பட்ட இப் போதை மாத்திரைகள் தொடர்பாக எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மன்னார் பிரதேச ஊழல் ஒழிப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)