
posted 3rd April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
கேரளா கஞ்சாவைக் கடத்தியவர் கைது
ஒரு கிலோ கேரளா கஞ்சாவை மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்றவரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்தனர்.
விசேட அதிரடிப் படையினரின் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்தக் கைது இடம்பெற்றது.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், கல்முனையை சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்கவராவார். இவரை சாய்ந்தமருது இலங்கை வங்கி அருகே அதிரடிப் படையினர் கைது செய்தனர்.
சந்தேக நபரிடம் இருந்து ஒரு கிலோ பொதி செய்யப்பட்ட கேரளா கஞ்சா, ஒரு தொகை பணம், கைபேசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் என்பனவும் கைப்பற்றப்பட்டன.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)