
posted 5th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
காணி அபகரிக்க முயற்சி - தோற்கவைத்தது மக்களின் புரட்சி
ஊர்காவல்துறை - தம்பாட்டியில் கடற்படை முகாம் அமைப்பதற்கான காணி சுவீகரிப்பு நடவடிக்கை பொதுமக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது.
தம்பாட்டி பகுதியில் கடற்படை முகாமுக்கு நிரந்தரமாக அமைக்க காணி சுவீகரிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று அந்தப் பகுதி மக்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நாரந்தனை வடக்கு ஜே/56 தம்பாட்டியில் உள்ள இறங்குதுறையில் அமைக்கப்பட்டுள்ள கடற்படை முகாமுக்கு நிரந்தரமாக காணியை சுவீகரிக்கும் நோக்கில் இரகசியமாக அளவீடு முன்னெடுக்கப்பட்டது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காணியை அளப்பதற்காக அங்கு சென்ற நில அளவைத் திணைக்களத்தின் வாகனத்தை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் நில அளவைத் திணைக்களத்தினர் திரும்பிச் சென்றனர்.
இதன்போது போராட்டம் நடைபெற்ற பகுதிக்கு வந்த கடற்படையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படம் பிடித்துச் சென்றிருந்தமையையும் அவதானிக்க முடிந்தது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)