
posted 24th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
ஈழத்தின் புகழ்பூத்த எழுத்தாளர் குப்பிழான் ஐ. சண்முகன் காலமானார்
ஈழத்தின் புகழ்பூத்த எழுத்தாளர்களில் ஒருவரான குப்பிழான் ஐ. சண்முகன் என்ற புனைபெயரில் அறியப்பட்ட ஐயாத்துரை சண்முகலிங்கம் (வயது 77) இன்று (24) திங்கட்கிழமை காலமானார்.
பாடசாலை ஆசிரியரான இவர் 'கோடுகளும் கோலங்களும்', 'சாதாரணங்களும் அசாதாரணங்களும்', 'உதிரிகளும்' உட்பட ஐந்து சிறுகதை தொகுதிகள், பிரபஞ்ச சுருதி என்ற கவிதை நூல் தொகுதியையும் வெளியிட்டுள்ளார். தவிர, ஏராளமான விமர்சனங்கள், அறிமுகங்கள், பத்திகள், குறிப்புகளையும் எழுதியவர்.
தனித்துவமான கதைக்களம், கதை சொல்லும் பாணிக்கு புகழ்பெற்றவரான குப்பிழான் ஐ. சண்முகன் கலாபூசணம், ஆளுநர் விருது, பேராதனை பல்கலைக்கழகத்தின் சங்க சான்றோன் விருதுகள் உட்பட பல விருதுகளையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)