
posted 2nd April 2022

மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் காணிப்பிரச்சனைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இதற்கான சரியான முடிவுனையை மேற்கொள்வதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் அபிவிருத்தி ஒருங்கணைப்பு குழுத் தலைவருமான காதர் மஸ்தான் இவ்வாறு தெரிவித்தார்.
வியாழக்கிழமை (31.03.2022) மன்னார் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் அபிவிருத்தி ஒருங்கணைப்பு குழுக்களின் தலைவருமான காதர் மஸ்தான் தலைமையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இவ் கூட்டத்தை தொடர்ந்து குழுக்களின் தலைவரான காதர் மஸ்தான் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்
மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்தி சம்பந்தமாக நாங்கள் இம் மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் ஆராய்ந்துள்ளோம். அத்துடன் அபிவிருத்தி தொடர்பாக முன்வைக்கப்பட்ட வேலைத் திட்டங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அடுத்து இ மாவட்டத்தில் சில பிரச்சனைகள் முன்வைக்கப்பட்டன. இது தொடர்பாக நாங்கள் சம்பந்தப்பட்ட அமைச்சுகளோடு கலந்துரையாடி அதற்கான தீர்வுகளையும் பெறுவதற்கான முன்னெடுப்புக்களையும் மேற்கொள்ள இருக்கின்றோம்.
அத்துடன் இப் பகுதியில் காணிப் பிரச்சனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதால், இது தொடர்பாக எங்களால் தீர்க்கமான சரியான முடிவுனைகளையும் மேற்கொள்வதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என இவ்வாறு தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House