
posted 30th April 2022
இலங்கையில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடியை நாம் அண்டை நாட்டுப் பிரச்சனை என பார்க்காது இங்கு வாழும் மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவ வேண்டும் என்பதே எமது அரசின் நிலைப்பாடாக இருக்கின்றது என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் முன்மொழிய அனைத்துக் கட்சிகளும் ஆதரவு வழங்கியுள்ளது.
வெள்ளிக்கிழமை (29.04.2022) நடைபெற்ற சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் உரையாற்றுகையில் இலங்கையில் உணவு அத்தியாவசியப் பொருட்கள், உயிர்காக்கும் மருந்து வகைகள் ஆகியற்றுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது. அன்றாட வாழ்க்கையில் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி வரும் இலங்கை மக்களுக்கு உதவ தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனித் தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார்
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு உள்ளிட்ட பல பகுதிகளில் கடும் உரத்தட்டுப்பாடும் ஏற்பட்டிருக்கின்றது.
இலங்கையில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடியை நாம் அண்டை நாட்டுப் பிரச்சனை என பார்க்காது, இங்கு வாழும் மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவ வேண்டும் என்பதே எமது அரசின் நிலைப்பாடாக இருக்கின்றது.
இலங்கை மக்களுக்கு 500 தொன் பால்மா, 40 ஆயிரம் தொன் அரிசி, 137 தொன் மருந்து வகைகள் நாம் வழங்குவதற்கான நடவடிக்கை எடுத்துள்ளளோம்.
இவ்வாறான உதவியை மாநில அரசானது தனிமையாக அனுப்ப முடியாது இருக்கின்றபோதும், நாம் ஒன்றிய அரசின் அனுமதியோடு இந்திய தூதரகம் ஊடாக இலங்கை மக்களுக்கு இந்தப் பொருட்களை அனுப்பிவைக்க முடியும்.
ஆகவே இது தொடர்பாக இந்திய பிரதமர் மோடி அவர்களிடம் நான் கோரிக்கையை முன்வைத்துள்ளளேன்.
இலங்கை தமிழர்களுக்கு இந்த நேரத்தில் உதவ வேண்டும் என சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தபொழுது அனைத்துக் கட்சிகளும் ஆதரவு வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY