
posted 3rd April 2022
இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளுள் ஒன்றான புனித நோன்பு இலங்கையில் இன்று ஞாயிறு முதல் ஆரம்பமாகியுள்ளது.
ஷஃபான் - ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் பலபாகங்களிலும் கடந்த சனிக்கிழமை மாலை தென்பட்டதால், இன்று ஞாயிறு முதல் புனித நோன்பை நோற்க ஆரம்பிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
இதன்படி கொழும்பு பெரிய பள்ளிவாசல், ஜம்இய்யத்துல் உலமா, மற்றும் முஸ்லிம், சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களம் என்பன கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில்,
நாட்டின் பல பாகங்களிலும் ரமழான் தலைப்பிறை தென்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையால் இன்று முதல் இலங்கையில் புனித நோன்பு ஆரம்பமாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை முஸ்லிம்கள் இன்று ஞாயிறு முதல் முப்பது தினங்கள் நோன்பு நோற்ற பின்னர் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளைக் கொண்டாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த புனித நோன்பு காலத்தில் தினமும் நோன்பு திறக்கும் நேரம் முஸ்லிம்களால், நோன்பாளிகளால் பயன்படுத்தப்படும் பேரீச்சம் பழங்கள் தற்சயம் அதிக விலையில் விற்பனை செய்யப்படுவதாக பலரும் புகார் தெரிவிக்கின்றனர்.
அரசாங்கம் நோன்பு காலத்தை முன்னிட்டு பேரீச்சம் பழங்கள் மீது விதித்திருந்த பண்ட மற்றும் உணவு வரியை வெகுவாக குறைத்திருந்தும் வியாபாரிகள் கூடிய விலையிலேயே விற்பனை செய்கின்றனர் என பலரும் தெரிவிக்கின்றனர்.
எனினும் தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதற்காக வியாபாரிகளினால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பேரீச்சம் பழங்கள் தற்சமயம் விற்பனைக்கு வந்துள்ள போதிலும் ஒரு கிலோ பேரீச்சம் பழம் 700 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாகவும் புகார் தெரிவிக்கப்படுகின்றது.

ஏ.எல்.எம்.சலீம்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House