
posted 11th April 2022
யாழ்.போதனா வைத்திய சாலையில் மலேரியா நோயாளி ஒருவர் இனம் காணப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் தொண்டமானாறு பகுதியை சேர்ந்த 29 வயதுடைய இளைஞன் ஒருவரே மலேரியா காய்ச்சலுடன் இனம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபர் சில நாட்களுக்கு முன்னர் நைஜீரியா நாட்டில் இருந்து திரும்பி வந்ததாகவும், அந்நிலையில் கடுமையான காய்ச்சலுக்கு உள்ளாகிய நிலையில் மந்திகை வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட வைத்திய பரிசோதனையில் குறித்த இளைஞனுக்கு மலேரியா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டு , அதற்கான சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.
வெளிநாட்டில் இருந்து வருவோர் காய்ச்சலுக்கு ஆளானால் உடனடியாக அருகில் உள்ள வைத்திய சாலைகளுக்கு சென்று சிகிச்சை பெறுமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
அதேவேளை மலேரியா அற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை இடம்பெற்றுள்ள போதிலும், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களினால் மலேரியா பரவல் அச்சம் ஏற்பட்டுள்ளது என்றும், மலேரியா எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நாடுகளுக்குச் செல்பவர்கள் மலேரியா முன்னெச்சரிக்கை மருத்துவ வழிகாட்டுதல்களை தகுதி வாய்ந்த மருத்துவ அதிகாரிகளிடம் பெற்றுச் செல்லுமாறும் வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

எஸ் தில்லைநாதன்
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY