திடீரென்று ஊரடங்கு நாடு பூராவும் - யாழ் அரச அதிபர்

தேவையற்ற நடமாட்டங்களைத் தவிர்த்து ஊரடங்கு காலத்தில் வெளியில் நடமாடாமல் இருப்பது சிறப்பானது என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

ஊரடங்கு நடைமுறைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு நேேற்று சனிக்கிழமை மாலை கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று மாலை 6 மணி தொடக்கம் திங்கட்கிழமை காலை 6 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேவையற்ற நடமாட்டங்களைத் தவிர்த்து ஊரடங்கு காலத்தில் வெளியில் நடமாடாமல் இருப்பது சிறப்பானது.

மிக மிக அத்தியாவசியமான தேவைகள் மற்றும் இதர அத்தியாவசியமான விடயங்களைப் பொறுத்தவரை அவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள பொலிஸ் நிலையங்களுடன் தொடர்பு கொண்டு அதன் ஊடாக கிடைக்கின்ற அறிவித்தலின்படி செயற்படலாம்.

இது தொடர்பாக மேலதிக தகவல்களை உரிய அறிவித்தல்கள் எங்களுக்கு முறையாகக் கிடைத்த பிற்பாடு பொதுமக்களுக்குத் தெரிவிப்போம். அதுவரை பொதுமக்கள் மிகவும் அமைதிகாத்து ஊரடங்குச் சட்டத்தை அனுசரித்து நடக்குமாறு தயவுடன் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

திடீரென்று ஊரடங்கு நாடு பூராவும் - யாழ் அரச அதிபர்

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House