
posted 15th April 2022
கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச சபையின் ரூபா 52 இலட்சம் நிதியில் புனரமைக்க்ப்பட்ட 340 மீட்டர் இமையாணன் துவாளி கண்ணகை அம்மன் வீதி நேற்று வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கரவெட்டி பிரதேச சபையின் தவிசாளர் திரு ஐங்கரன் தலமையில் இடம் பெற்ற நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஐனாதிபதி சட்டத்தரணி எம் ஏ சுமந்திரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வீதியை திறந்து வைத்ததுடன் பெயர்பலகையையும் திரை நீக்கம் செய்து வைத்தார்.
இந்நிகழ்வில் கரவெட்டி பிரதேச சபையின் உறுப்பினர்கள், துவளி கண்ணகி அம்மன் ஆலய நிர்வாகிகள் கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.