பேராசிரியர் சோ. சந்திரசேகரம் காலமானார்

சிரேஸ்ட பேராசிரியர் சோமசுந்தரம் சந்திரசேகரம் தமது 78ஆவது வயதில் காலமானார்.

இன்று அதிகாலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து காலி, பலப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.

இவர் 1963ஆம் ஆண்டு பேராதனை மற்றும் ஜப்பான் ஹிரோசிமா பல்கலைக்கழகங்களில் தமது பட்டபடிப்பை பூர்த்தி செய்திருந்தார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர், பேராதனை பல்கலைகழகத்தின் போதனா ஆசிரியர், இலங்கை மத்திய வங்கியின் மொழிப்பெயர்ப்பாளர், ஆசிரியர் கலாசாலையின் விரிவுரையாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அவர் கடமையாற்றியுள்ளார்.
இலங்கையில் தமிழர் கல்வி, புதிய நூற்றாண்டுக்கான கல்வி, இலங்கை இந்தியர் வரலாறு போன்றவற்றுடன் மலையக கல்வி அபிவிருத்தி தொடர்பான பல நூல்களை அவர் எழுதியுள்ளார்.

பேராசிரியர் சோ. சந்திரசேகரம் காலமானார்

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு பதிவு செய்ய என்பதைக் கிளிக் செய்யுங்கள்>>>பதிவு செய்ய