இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு பிரதேச அபிவிருத்தி குழு தலைவருக்கான நியமனம்

புத்தளம் மாவட்டத்தின் ஆணைமடு தேர்தல் தொகுதியின் ஆணைமடு, நவகத்தேகம, பல்லம மற்றும் கருவலகஸ்வௌ பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் பதவிக்கு வெளிநாட்டு தொழில்வாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்ன அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதற்கான நியமனக் கடிதம் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்ன அவர்களுக்கு நேற்று (11) அலரி மாளிகையில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது.

குறித்த சந்தர்ப்பத்தில் கிராமிய மற்றும் பிரதேச குடிநீர் வழங்கல் கருத்திட்டங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கௌரவ சனத் நிசாந்த, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ. திசாநாயக்க உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு பிரதேச அபிவிருத்தி குழு தலைவருக்கான நியமனம்

வாஸ் கூஞ்ஞ

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY