
posted 8th April 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பாடசாலைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வானது கிராமிய வீதிகள் உட்கட்டமைப்பு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தனின் பங்குபற்றுதலுடன் இந்த பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்தினத்தின் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்டினா முதளிதரன் சிறப்பு அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவில் உள்ள களுதாவளை மகா வித்தியாலயம், தேற்றத்தீவு மகா வித்தியாலயம், குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயம் என்பவற்றின் மாணவர்களின் விளையாட்டுத் திறனை அபிவிருத்தி செய்வதற்கு இவ் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இப் பிரதேசப் பாடசாலை மாணவர்கள் தேசிய மட்டம் மற்றும் மாகாண மட்டத்தில் பல வருடங்களாக தமது திறமைகளை நிரூபித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் தடை தாண்டல் ஓட்டப் போட்டிக்கான உபகரணங்கள், பரிதிவட்டம், ஈட்டிகள், கூடைப்பந்து, கால்பந்து போன்ற விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்யகெளரி தரணிதரன், பட்டிருப்பு கல்வி வலய உதவிக் கல்வி பணிப்பாளர் (உடற்கல்வி) த. இதயகுமார், பாடசாலைகளின் அதிபர்கள், இராஜாங்க அமைச்சரின் இணைப்பாளர் த. தஜிவரன், பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)