
posted 17th April 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
பண்டிதர் கடம்பேசுவரன் இயற்கை எய்தினார்
ஈழத்தின் மூத்த தமிழ் அறிஞரும் தமிழ் மரபுவழி கல்வியியலாளருமான பண்டிதர் ம. ந. கடம்பேசுவரன் (வயது 78) காலமானார்.
வட்டுக்கோட்டை சிந்துபுரத்தை பிறப்பிடமாகக் கொண்ட அவர் நேற்று முன்தினம் இரவு தனது இல்லத்திலேயே நோய் மற்றும் வயது மூப்பால் காலமானார்.
ஆரிய திராவிட பாஷாபிவிருத்தி சங்கத்தின் தலைவராக 40 ஆண்டுகளாக பதவி வகித்த இவர் பத்திரிகையாளர், பதிப்பாசிரியர், இலக்கண, இலக்கியங்களுக்கு உரைகளை எழுதியதுடன், பல நூல்களையும் வெளியிட்டுள்ளார். அத்துடன், யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரியின் முன்னாள் ஆசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவரின் மறைவு குறித்து யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்த என். சண்முகலிங்கன், “ஈழத்து மரபுவழி பண்டித கல்வியின் பேராசானை தமிழுலகம் இழந்து நிற்கின்றது. கடந்த அரை நூற்றாண்டு காலமாக மரபுவழித் தமிழ் கல்வி நிறுவனமான ஆரிய திராவிட பாஷாவிருத்தி சங்கத்தை பல்வேறு இன்னல்களின் மத்தியில் காத்து நின்ற செயல் வீரனின் மறைவு ஈடுசெய்ய முடியாதது” என்று குறிப்பிட்டுள்ளார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)