
posted 12th April 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
நெகிழ்ச்சியை ஏற்படுத்திய இளைஞர்களின் முன்மாதிரியான செயல்

அதிக வெப்பமான காலநிலை நிலவுவதால் விலங்குகளின் நீர்த் தேவையை பூர்த்திசெய்யும் பொருட்டு வவுனியா - மன்னார் வீதியின் சில பகுதிகளில் மண்சட்டி மற்றும் சிரட்டைகளைப் பயன்படுத்தி இளைஞர்களினால் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான தண்ணீர் தொட்டிகளை அமைத்து இந்த வெப்பகாலத்தில் பறவைகள், விலங்குகளுக்கு தாகம் தீர்க்கும் உன்னத கடமையில் குறித்த இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இளைஞர்களின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)