
posted 1st April 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
தமிழ் அரசு கட்சியினரை அநுர தரப்பு சந்திக்கிறது
இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள தேசிய மக்கள் சக்திக்கும், தமிழ் அரசுக் கட்சிக்கும் இடையில் விசேட சந்திப்பு அடுத்தவாரம் கொழும்பில் நடைபெறவுள்ளது என்று சுமந்திரன் எம். பி. தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளதாக அநுரகுமார திஸநாயக்க கூறியுள்ள நிலையிலேயே சுமந்திரன் எம். பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
"அடுத்த வாரம் அவர்கள் எம்மைச் சந்திக்கவுள்ளதாகக் கூறினார். அவர்களோடு மட்டுமல்ல ஏனைய பல கட்சிகளுடனும் நிறைய சந்திப்புக்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், ஜனாதிபதித் தேர்தல் என்று வருகின்றபோது அதில் யார், யார் வேட்பாளர்கள் என அறிவிக்கப்படுகின்றபோது நாங்கள் உரிய சந்திப்புகளை மேற்கொண்டு முடிவைத் தீர்மானிப்போம்.
இவ்வாறான நிலைமையில்தான் தேசிய மக்கள் சக்தியினர் எம்மைச் சந்திக்கப் போவதாகச் சொல்லியுள்ளனர். எனவே, எம்மைச் சந்திக்க வருகின்ற எல்லோரையும் நாங்கள் சந்திப்போம்" என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)