
posted 25th April 2024
உறவுகளின் துயர் பகிர்வு
தந்தை செல்வா நினைவுதினமும், அஞ்சலியும்
தந்தை செல்வாவின் 47ஆவது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு அஞ்சலியும் நினைவுப் பேருரையும் வெள்ளிக்கிழமை (26) நடைபெறவுள்ளது.
காலை 9 மணிக்கு யாழ் நகரில் உள்ள தந்தை செல்வா நினைவிட வளாகத்தில் ஓய்வுநிலை ஆயர் கலாநிதி சு. ஜெபநேசன் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் தந்தை செல்வாவின் சிலைக்கு மாலை அணிவித்து அவரின் சாமதியில் மலர் அஞ்சலி நடைபெறும்.
இதைத் தொடர்ந்து, நினைவுப் பேருரையை யாழ். பல்கலைக்கழக அரசியல் துறை தலைவர் பேராசிரியர் கே. ரி. கணேசலிங்கம், 'இலங்கை தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான வாய்ப்புகளும் சவால்களும்' என்ற தலைப்பில் ஆற்றுவார்.
பிற்பகல் 4 மணிக்கு தெல்லிப்பழை சேமக்காலையில் அஞ்சலி நிகழ்வு நடைபெறவுள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)